என் மலர்
நீங்கள் தேடியது "morality is a virtue"
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- மாணவர்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை வாசிக்க மாணவர்கள் அனைவரும் உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.
போதைப் பொருட்கள்
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
போதைப் பொருட்கள் பழக்கத்திற்கு எதிராக ஒரு ஜனநாயக போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம், ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.
ஒழுக்கத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற முடியும். ஒழுக்கமாக இருப்பவர்கள்தான் வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார்கள் வரலாறும் அதையேதான் நமக்கு உணர்த்தி இருக்கிறது.
ஒழுக்கமாக இருப்பவர்கள்தான் விஞ்சானியாக, மருத்துவராக பல்வேறு உயர் பதவிகளை அடைய நமக்கு வழிகாட்டுகிறது. சமூகத்தில் பல்வேறு நிலைகளில் இந்த போதைப் பொருட்கள் மக்களை ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கிறது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நமது வாழ்வை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒருவன் பணத்தை இழந்தால் சம்பாதித்துக்கொள்ள முடியும் ஆனால் வாழ்க்கையை இழந்தால் சம்பாதிக்க முடியாது.
போதைப் பழக்கத்தால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து உள்ளது. போதைப் பழக்கத்தால் நாம் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் இழந்து இருக்கிறோம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்கப்படுவது இல்லை என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் பெற்றோர்கள் பல்வேறு துன்பங்களை சத்தித்து, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என நினைத்து நினைத்து உயர்ந்த கனவுகளுடன் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
போதைப் பழகத்தில் அவர்களின் கனவுகள் சிதைந்து விடக் கூடாது. நமது திருவண்ணாமலை மாவட்டம் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்துவது மற்றும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் முன்னனியில் இருக்க வேண்டும்.
போதை என்பது ஒரு தனிநபர் பிரச்சனையல்ல அது ஒரு சமுதாய பிரச்சனை போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள், சாதி வன்முறைகள் என பல்வேறு சமுதாய சீர்கேடு ஏற்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்கைள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
தமிகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவில் பல்வேறு மாநிலத்திற்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது, தமிழ்நாடு அரசு 180 நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று செல்ல ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதுபோல போதைப் பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் அவர்கள் நினைக்கிறார்கள். திருவண்ணாமலை ஆன்மீக நகரமாக இருப்பதால் பல்வேறு மாநிலத்தில் இருந்து பொது மக்கள் வருகிறார்கள். அதனால் நமது காவல்துறை இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் போதைப் பொருட்கள் தடுப்பதற்கு காவல்துறை இரவில் ரோந்து பணியில் மேற்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரிடம் கிரிவலப்பாதைக்கு என தனியாக காவல் நிலையம் வேண்டும் என மனு அளித்து இருக்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கும் எந்த நிலையிலும் போதைப் பொருட்கள் நுழைய முடியாது என்ற நிலையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
போதைப் பொருட்களை தடுப்பதற்கு காவல்துறை மட்டும் பொறுப்பு அல்ல பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் நினைத்தால் மாணவர்களை பக்குவப்படுத்த முடியும். பள்ளி பள்ளி ஆசிரியர்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும் திருவண்ணாமலை மாவட்டம் வரும் காலத்தில் போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் முன்னின்று பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்கா கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூரத்தி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






