search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mookaiya Devar"

    • மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க திரண்டு வருமாறு ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • தேவர் நினைவிடத்தில் நாளை (6-ந்தேதி) கலை 10.45 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.

    திருமங்கலம்

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அரசியலிலும், பொது சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பின ராகவும், சட்டமன்ற உறுப்பி னராகவும் மக்களுக்கு பணியாற்றியவர் பி.கே.மூக்கையா தேவர்.

    அவரது 43-வது நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் பி.கே.மூக்கையா தேவர் நினைவிடத்தில் நாளை (6-ந்தேதி) கலை 10.45 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஜக்கையன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி நீதிபதி ஆகியோர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பி.கே.மூக்கையா தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்து வண்ணம் முன்னாள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர பேரூர், கிளை நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் அனைவரும் அணி திரண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×