என் மலர்
நீங்கள் தேடியது "Minivan overturned accident"
- முதல் கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, விபத்துக்குள்ளானது.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரவேணு,
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் ஊட்டியை நோக்கி ஒரு மினிவேன் சென்று கொண்டிருந்தது. இதில் 12 பேர் இருந்தனர். இந்த வேன் முதல் கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வேனில் வந்தவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






