என் மலர்
நீங்கள் தேடியது "Minister Sai J. Saravanankumar"
- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்
- குடிநீர் நீர் தேக்க தொட்டி பொறுப்பாளர் பாலு மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதிக் குட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் கூடப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் வணிக வளாகங்கள் தொழிற்சாலை களும் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் குடிநீர் தேவை அதிகம் உள்ளது.
தற்போதைய குடிநீர் குழாய்கள் மூலம் போதுமான குடிநீர் பொதுமக்களுக்கு இருந்தாலும், எதிர் வரும் காலத்தில் குடி தண்ணீர் பற்றாக்குறை போக்கும் விதமாக ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடம் அருகே புதிய போர்வெல் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
ரூ.35.29 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை போர்வெல் அமைக்கும் பணியை ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளர் திரு வேங்கடம், உதவி பொறியாளர், பீனா ராணி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் சாய்.தியாகராஜன், கட்சி நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள், குடிநீர் நீர் தேக்க தொட்டி பொறுப்பாளர் பாலு மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- புதுவையில் ரேஷன்கடைகள் மூலம் மூலமாக அரிசி உள்பட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- கரீப்கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இரட்டை அவியல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி, ஜூலை 16-
புதுவையில் ரேஷன்கடைகள் மூலம் மூலமாக அரிசி உள்பட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்பின் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப் பட்டதால் ரேஷன்கடைகள் மூடப்பட்டன. இதனால் ரேஷன்கடை ஊழியர்கள் சம்பளமின்றி தவிக்கின்றனர். கரீப்கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இரட்டை அவியல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இவைகளை ரேஷன்கடைகள் மூலம் வழங்காமல் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுவை குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் டெல்லியில் நடந்த நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் சார்பில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் புதுவை மக்க ளுக்கு பணத்துக்கு பதிலாக அரிசி வழங்க வேண்டும்.
ரேஷன்கடைகளை திறக்க வேண்டும். மக்களுக்கு ஒற்றை அவியல் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதன் விளைவாக பொது விநியோக முதன்மை ஆலோசகர் பங்கஜ்மிஸ்ரா தலைமையில் ஒன்றிய அதிகாரிகள் புதுவைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பிறகு சட்டசபையில் அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் பணத்துக்கு பதில் அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர். கூட்டத்தில் புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






