search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Anbalagan"

    அண்ணா பல்கலைக்கழக ஊழல் வெளியானதையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மார்க் மதிப்பீட்டில் தவறுகள் நடந்திருக்கிறதா என்பதை கண்காணிக்க இருப்பதாக அமைச்சர் அன்பழகன் கூறினார். #RevaluationScam #MinisterAnbalagan
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பரீட்சை பேப்பர் மறுமதிப்பீட்டில் மார்க் அதிகமாக வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

    உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் இந்த ஊழல் தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழகத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ரூ.63 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. பொதுவாக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதற்கு கொள்முதல் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு ஒப்புதல் பெறவில்லை என்றால் அது தவறானதாகும்.



    ஆனால் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை துணைவேந்தர் அல்லது கன்வீனர் கமிட்டிக்கு இதற்கான கட்டுப்பாட்டு அதிகாரம் உள்ளது. அந்த நேரத்தில் அங்கு துணைவேந்தர் இல்லை.

    பேராசிரியர் உமா அப்போது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனம் நான் மந்திரியாவதற்கு முன்பு 2015-ம் ஆண்டு நடந்ததாகும்.

    இந்த ஒப்பந்தம் செய்ததில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். அந்த நேரத்தில் செயலாளர் பதவியில் இருந்தவர் யார்? என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம்.

    மார்க் மறுமதிப்பீட்டில் எப்படி தவறு நடந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டியது உள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற தவறு நடந்ததால் மற்ற பல்கலைக்கழகத்திலும் இதே தவறு நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வேறு நபராக இருப்பார். அவரும் இதை செய்திருப்பார் என்று சொல்ல முடியாது.

    ஆனாலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற தவறுகள் நடந்திருக்கிறதா? என்பதை அறிய நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம். பல்கலைக்கழகத்தில் நடந்த தவறுகள் அமைச்சரவை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    அது பல்கலைக்கழக மட்டத்தில் நடந்துள்ளது. உயர்கல்வித்துறையில் ஏதேனும் அதிகாரிக்கு அதில் தொடர்பிருந்தால் அது தவறானதாகும். விசாரணையில் யார் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த வி‌ஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு எந்த பயமும் இல்லை. இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். விசாரணையில் யார் தவறு செய்தாலும், எந்த துணைவேந்தர் காலத்தில் நடந்திருந்தாலும் நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். அவர்கள் முன்னாள் துணைவேந்தர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.

    ஏற்கனவே பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது புகார் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்த எந்த அதிகாரிகளும் தப்ப முடியாது.

    இவ்வாறு அன்பழகன் கூறினார். #RevaluationScam #MinisterAnbalagan

    என்ஜினீயரிங் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 25-ந்தேதி தொடங்கும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். #MinisterAnbalagan
    மதுரை:

    தேசிய அளவில் ஜூனியர்களுக்கான ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஸ் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 14 முதல் 18 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் அன்பழகன், செல்லூர் ராஜூ ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இது குறித்து சம்மேளனத்தின் அகில இந்திய செயலாளர் நாசர் உசேன், தமிழக தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஆகியோர் கூறும்போது, மேலைநாடுகளில் விளையாடும் ரக்பி விளையாட்டு இந்தியாவில் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இந்த போட்டி தமிழகத்தின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, கபடி, கால்பந்து ஆகிய மூன்று போட்டிகளையும் உள்ளடக்கியது. 14 நிமிடங்கள் நடைபெறும் இந்த போட்டியில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியின் முடிவில் நன்றாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மதுரையில் 3 நாட்கள் இந்த போட்டி நடைபெறும் என்றனர்.

    ஆண்களுக்கான போட்டியில் தமிழ்நாடு அணி மத்திய பிரதேசம் அணியை 27-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. அதே போன்று மேற்குவங்கம், ஒடிசா, பீகார், கோவா, டெல்லி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறும் போது, 2018-19-ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பிற்கான பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட தலைநகரில் 42 சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன என்றார். #MinisterAnbalagan
    தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று வெளியிட்டார். #TNEA2018 #TNEARankList
    சென்னை:

    தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

    இந்த படிப்புகளில் சேருவதற்காக 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். முதலில் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அதன்பின்னர் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டது.

    தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், தர வரிசைப் பட்டியலை வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர், முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என அறிவித்தார்.



    அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் தரவரிசைப் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தரவரிசைப் பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து ஆன்லைன் கலந்தாய்வுக்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி உள்ளது.  #TNEA2018 #TNEARankList

    ×