என் மலர்
நீங்கள் தேடியது "MGR ceremony"
- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நடக்கிறது
ராணிபேட்டை:
அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக நடத்தப்படுகிறது.
இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடம் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் குறித்த விவரங்களை அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வருகிற 19-ந் தேதி போளூர் தொகுதி பேசுபவர்கள் முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து மன்ற உலக எம்ஜிஆர் துணை செயலாளர் முருகுமணி கடியாபட்டி கிருஷ்ணன்.
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வாலாஜாபாத் கணேசன், சோழவேந்தன், புதூர் மணி, ஜோலார்பேட்டை மாவட்ட செயலாளர் கே சி வீரமணி, அதிமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல், ஆரணி பி.ஏ.டி.சி. கே.அன்பழகன் காட்பாடி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் கோவை சத்யன், இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஆனந்த் மற்றும் பரசுராமன்.
அரக்கோணம், அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கோபிநாதன், நடிகை ஜெயதேவி. செய்யார் தொகுதி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராயபுரம் மனோ, சினிமா நடிகர் அனுமோகன் மற்றும் அதிரடி பாலன்.
20-ந் தேதி திருவண்ணாமலை, தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் கோவை சத்யன், திரைப்பட நடிகர் அனுமோகன்.
வந்தவாசி முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜவஹர் அலி, கடியாபட்டி கிருஷ்ணன்.
வேலூர் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சங்கரதாஸ், மகளிர் அணி துணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கலைச்செல்வி, டி.பி.குலாப்ஜான்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் டாக்டர் சுனில், பேராவூரணி திலீபன். ஜனனி சதீஷ்குமார், ஆற்காடு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனி பி. சதீஷ்குமார் மற்றும் சோழ வேந்தன்.
21-ந்தேதி குடியாத்தம் செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, தர்மராஜன், ஆமூர். தனசேகரன்.
கீழ்பென்னாத்தூர் தொகுதி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கலை புனிதன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பஞ்செட்டி கே. நடராஜன், டாக்டர் வழக்கறிஞர் சிவசங்கரன், கலசப்பாக்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சீனிவாசன், தஞ்சை சங்கர், பிராட்வே எல். குமார்.
வாணியம்பாடி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பிரபு, தேவாலா மா.ரவி, வாலாஜா பி. கிருஷ்ணன்.
சோளிங்கர் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொன். ராஜா, செங்கை கோவிந்தராஜன், அதிரடி பாலன்.
22 -ந் தேதி ஆரணி தொகுதி அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன், ஆர். கே நகர் மணிமாறன்.
கே வி குப்பம் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், நடிகை பபிதா மற்றும் அதிரடி அரங்கநாதன்.
செங்கம் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் சின்னய்யா, திரைப்பட நடிகை டி.கே.கலா மற்றும் பன்னீர்செல்வம்.
ராணிப்பேட்டை அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சசிரேகா, வண்ணை ஆர். சேகர்
ஆம்பூர், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் லட்சுமி நாராயணன், சிவன் ஸ்ரீனிவாசன், பிராட்வே எல். குமார் ஆகியோர் பேசுகின்றனர்.
மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அணி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ணைந்து எ.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும்.அதன் விவரங்களை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






