search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Merit Test"

    • ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளிகளில் சேர தகுதி தேர்வு நடந்தது.
    • இதில் 240 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் அரசு மாதிரி பள்ளி ஏற்படுத்த ஆணையிடப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 9-வது வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளில் கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 240 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான தகுதி தேர்வு ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது.

    இது குறித்து மாவட்ட அரசு மாதிரி பள்ளியின் முதல்வர் ரவி கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தற்போது 9-வது வகுப்பு படிக்கும் மாணவர்கள் 240 பேர் தேர்வு செய்யப்பட்டு தகுதி தேர்வில் கலந்து கொள்கின்றனர்.

    இவர்களில் தமிழ் மற்றும் ஆங்கில பிரிவில் தலா 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் அனைவரும் 2023-24 கல்வியாண்டில் அரசு மாதிரி பள்ளியில் 10-வது வகுப்பில் சேர்க்கப்பட உள்ளனர். தேர்வை கண்காணிப்பதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×