search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meng hongwei"

    சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் என இண்டர்போல் தெரிவித்துள்ளது. #Interpol #MengHongwei
    லியான்:

    பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சீன தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். 
     
    கடந்த செப்டம்பர் முதல் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மெங் ஹாங்வே செப்டம்பர் 29-ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது முதல் அவரை காணவில்லை என தகவல் வெளியானது. இண்டர்போலின் சீன தலைவர் மெங் ஹாங்வேவை விசாரணைக்காக சீன போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ஹாங்காங்கின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

    இதற்கிடையே விதிகளை மீறியது தொடர்பாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் என இண்டர்போல் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், மெங் ஹாங்வே அனுப்பி வைத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இண்டர்போலின் சீன துணை தலைவராக உள்ள கிம் ஜாங் யங் பொறுப்பு தலைவராக நியமனம் செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளது. #Interpol #MengHongwei
    மாயமான இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என சீன அரசு தெரிவித்துள்ளது. #Interpol #MengHongwei
    பெய்ஜிங் :

    பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். 
     
    இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தனது கணவரை செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை என அவர் அளித்த புகார் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லியான்ஸ் நகரில் மெங்க் ஹாங்வே வசித்து வந்துள்ளார். அவர் சீனாவை சேர்ந்தவர். சீனாவில் பாதுகாப்புக்கான துணை அமைச்சராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மெங்க் ஹாங்வே செப்டம்பர் 29ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது முதல் அவரை காணவில்லை என்று தகவல் வெளியானது. 



    இதற்கிடையே, இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேவை, விசாரணைக்காக சீன போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

    இந்நிலையில், விதிகளை மீறியது தொடர்பாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. #Interpol #MengHongwei
    சர்வதேச போலீஸ் அமைப்பின் (இன்டர்போல்) இயக்குநர் மெங் ஹாங்வேயை காணவில்லை என அவரது மனைவி அளித்துள்ள புகாரின் பெயரில் பிரான்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #Interpol #MengHongwei
    பாரீஸ்:

    சர்வதேச அளவிலான பொருளாதார, போதை மற்றும் கிரிமினல் குற்றங்களை தடுக்க உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) அமைப்பின் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வே கடந்த 2016-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் மாயமாகியுள்ளதாக மனைவி புகாரளித்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டில் உள்ள லைய்ன் நகரில் வசித்த அவர் சமீபத்தில் சீனா சென்றதாகவும், அப்போதிருந்து திரும்பி வரவில்லை, எந்த தகவலும் இல்லை என மனைவி போலீசில் புகாரளித்துள்ளார். இதனை அடுத்து, பிரான்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 
    ×