என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical student mystery dead"

    • கடந்த சில மாதங்களாக விக்னேசுக்கு மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • நேற்று விக்னேஷ் தனது தாயார் லீலாவதியை டவுனில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பரணி நகர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி லீலாவதி.

    இவர்களுக்கு விக்னேஷ் (28) உள்பட இரண்டு மகன்கள் உள்ளனர். மணி ஒரு கல்லூரியில் பேராசிரியராகவும், லீலாவதி டவுனில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களது மூத்த மகன் வெளியூரில் வசித்து வருகிறார். விக்னேஷ் ஈரோட்டில் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விக்னேசுக்கு மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று விக்னேஷ் தனது தாயார் லீலாவதியை டவுனில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

    பின்னர் மாலையில் அவரது தாயார் வீட்டிற்கு வந்தபோது விக்னேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விக்னேஷ் உடலில் எந்த காயங்களும் இல்லை. அவர் ஊசி போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் விக்னேஷ் உடல் உடற் கூராய்வு செய்த பின்னரே அவர் சாவுக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ×