என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maupuchi"

    • காலை 9 மணிக்கு மரவள்ளியில் ஒருங்கிணைந்த முறையில் மாவுப்பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
    • பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிணைத்த முறையில் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மரவள்ளியில் ஒருங்கிணைந்த முறையில் மாவுப்பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலையில் மரவள்ளி பயிர்களைத் தாக்கும் மாவுப்பூச்சிகள், அதனை கட்டுப்படுத்தும் முறைகள், பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிணைத்த முறையில் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதில் மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விவ சாயம் சார்ந்த களப்பணி யாளர்கள், பண்ணையார்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு வரும் விவசாயி கள், தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.

    ×