என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mannkibaat
நீங்கள் தேடியது "MannKiBaat"
வன்முறையால் எந்த பிரச்சனையையும் தீர்த்துவிட முடியாது, அமைதியும் அகிம்சையும்தான் இறுதியில் வெற்றிபெறும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். #PMModi #MannKiBaat
புதுடெல்லி:
2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று 45-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றிய மோடி, வன்முறையால் எந்த பிரச்சனையையும் தீர்த்துவிட முடியாது, அமைதியும் அகிம்சையும்தான் இறுதியில் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார்.
குருநானக் தாஸ், கபிர் தாஸ் போன்ற மகான்கள் சாதிமுறைகளை ஒழிக்க போராடியதுடன் நாட்டில் சமூக ஒருமைப்பாடு நிலவ பாடுபட்டதாக தெரிவித்த மோடி, மறைந்த பாரதிய ஜன சங்க தலைவர் சியாமா பிரசாத் மூகர்ஜியும் அதே வழியில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக உழைத்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜாலியன்வாலா பாக் படுகொலையை நினைவுகூர்ந்த அவர், இந்த சம்பவத்தின் மூலம் கொடூரமும் வன்முறையும் எந்த பிரச்சனையையும் தீர்க்க உதவாது. அகிம்சை, விட்டுக் கொடுக்கும் குணம், தியாகம் போன்றவைதான் இறுதியில் வெற்றிபெறும் எனவும் வலியுறுத்தினார். #PMModi #MannKiBaat
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X