search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manjapai Award"

    • சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
    • குறுந்தகடு (சி.டி.) பிரதிகள் இரண்டை கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மஞ்சப்பையை சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது வழகங்கப்பட உள்ளது. இந்த விருது பெறுவோர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-வது பரிசாக ரூ.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும்.

    இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும்.

    இதற்கான விண்ணப்ப படிவங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலக இணையதளமான https://tiruppur.nic.in என்பதில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற மே மாதம் 1-ந் தேதி கடைசி நாளாகும்.

    விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவன தலைவரால் முறையாக கையொப்பமிட்டு இருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுந்தகடு (சி.டி.) பிரதிகள் இரண்டை கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×