என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandala Abhishekam completed"

    • கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    ஆற்காடு:

    ரத்தி னகிரி பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள மகா கண பதி கோவிலில் கும்பாபிஷே கத்தையொட்டி நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் நேற்று நிறைவடைந்தது.

    விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை பால முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னி லையில், உச்சிஷ்ட கணபதி ஜெபம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகர் பூஜை, தன பூஜை, கோ பூஜை, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் மகா கணபதி. 1,008 ஆஹூதிகள் மகா பூர்ணாஹுதி, யத்ரா தானம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தொழிலதிபர் நல்லு சாமி, உபயதாரர்கள் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ×