search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manamadurai student suicide"

    மானாமதுரையில் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பட்டத்தரசி தெருவைச் சேர்ந்தவர் பாலு. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாஸ்கரன் (வயது 18). மானாமதுரையில் உள்ள பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் பாஸ்கரன் நேற்று மாலை திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மானாமதுரை சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாஸ்கரன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    ×