என் மலர்
நீங்கள் தேடியது "Mamul asked Intimidation"
- சரமாரியாக தாக்கினர்
- போலீசார் விசாரணை
தூசி:
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே சின்ன ஏழாச்சேரியில் சதீஷ் (வயது 31) என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கல்குவாரிக்குள் சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரபு, பாலாஜி, தர்மலிங்கம், நாராயணன், ராஜா, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அத்துமீறி நுழைந்து அங்கு பணியில் இருந்த அழகுபாண்டி என்பவரை ஆபாசமாக திட்டி, சரமாரியாக தாக்கி மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர்.
மேலும் நாங்கள் கேட்ட தொகையை கொடுக்காவிட்டால் இங்கிருந்து ஒரு லாரி கூட செல்லாது என மிரட்டல் விடுத்த னர்.
இதுகுறித்து சதீஷ் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து பிரபு உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






