என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mamallapuram police investigation
நீங்கள் தேடியது "mamallapuram police investigation"
மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் அருகே வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றுவதற்காக இன்று அதிகாலை தனியார் வேன் சென்றது. டிரைவர் செந்தில்குமார் வேனை ஓட்டினார்.
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கூட்டுரோடு டோல்கேட் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே வந்தபோது திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது.
அதிர்ச்சி அடைந்த டிரைவர் செந்தில்குமார், வேனை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் உதவி கேட்டு ஓடினார்.
இதற்குள் வேனில் பிடித்த தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
முக்கிய சாலையில் வேன் தீப்பிடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெட்ரோல் பங்கில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் வேன் தீப்பற்றியதால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. வேனில் தீப்பிடித்த உடன் டிரைவர் இறங்கியதால் அவர் உயிர் தப்பினார்.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றுவதற்காக இன்று அதிகாலை தனியார் வேன் சென்றது. டிரைவர் செந்தில்குமார் வேனை ஓட்டினார்.
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கூட்டுரோடு டோல்கேட் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே வந்தபோது திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது.
அதிர்ச்சி அடைந்த டிரைவர் செந்தில்குமார், வேனை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் உதவி கேட்டு ஓடினார்.
இதற்குள் வேனில் பிடித்த தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
முக்கிய சாலையில் வேன் தீப்பிடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெட்ரோல் பங்கில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் வேன் தீப்பற்றியதால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. வேனில் தீப்பிடித்த உடன் டிரைவர் இறங்கியதால் அவர் உயிர் தப்பினார்.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X