search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malaysia prime minister"

    • அன்வார் இப்ராகிம் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு குறைவாக 82 இடங்களைப் பெற்றது.
    • முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது.

    மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார்.

    ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து மொகிதீன் யாசினி பிரதமராக பதவி ஏற்றார்.

    அவர் மீது ஊழல் புகார் எழுந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி விலகினார். அதன்பிறகு புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாசோப் பதவி ஏற்றார். இதற்கிடையே ஆளும் கூட்டணியின் பெரிய கட்சியான அம்னோ கட்சி அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

    இதையடுத்து பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உத்தரவிட்டார். இதற்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா ஒப்புதல் அளித்தார். அடுத்த 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, கடந்த சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியான நிலையில்,  அன்வர் இப்ராஹீம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு குறைவாக 82 இடங்களைப் பெற்றது.

    முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

    ஆனால், மற்ற சிறிய கட்சிகள் ஐக்கிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது. மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமராக நியமிக்கப்படுகிறார். இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

    உள்ளூர் நேரப்படி இன்றுமாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.

    மலேசியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி கிடையாது என்று பிரதமர் மகாதிர் முகமது அறிவித்துள்ளார். #MahathirMohamad

    கோலாலம்பூர்:

    மலேசிய பிரதமர் மகாதிர் முகமது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மலேசியாவில் ஓரினசேர்க்கை திருமணத்துக்கு அனுமதி வழங்கப்படுமா? என கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர் மலேசியாவில் ஓரின சேர்கையாளர்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோன்று உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் ஆணாகவும், பெண்ணாகவும் மாறியவர்கள் திருமணத்துக்கு அனுமதி இல்லை.

    மலேசியாவில் சில வி‌ஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கத்திய நாடுகள் வேண்டுமானால் அதை மனித உரிமைகள் என்று கூறிக்கொள்ளலாம்’’ என்றார்.

    அவரின் இத்தகைய கருத்து மலேசியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்களும், ஓரினசேர்க்கையாளர்களும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

    மலேசியாவில் போதைபொருள் கடத்தல், கொலை, கொள்ளை, ஓரினச்சேர்க்கை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக 2 பெண்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. #MahathirMohamad

    ×