search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makara Lampu Puja"

    • பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை புறப்பட்டு சென்றனர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்  :

    பல்லடம் அருகே பொங்கலூரில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் 11-ம் ஆண்டு அய்யப்ப சாமி கோவில் மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை7மணிக்கு சக்திவிநாயகர் வழிபாடு, 8 மணிக்கு இருமுடி கட்டுதலும், மாலை 5 மணிக்கு சக்தி அழைத்தல், இரவு 7 மணிக்கு மகர விளக்கு பூஜையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. சுமார் இரவு 9 மணி அளவில் பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை புறப்பட்டு சென்றனர். முன்னதாக மாலை 5 மணி அளவில் பொங்கலூர் நீலகண்டியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×