என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maintenance Center Building"

    • அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் பிரத்யேக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமலராகவன், நகர செயலாளர் தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் உஷா நந்தினி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பிரத்யேக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிடத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 28 நாட்கள் வரை உள்நோயா ளியாக இம்மையத்தில் அனுமதி பெற்று சிகிச்சை வழங்கப்படும். பச்சிளம் குழந்தைகள் உட்பிரிவுகள், 5 உள்பிரசவமான குழந்தை கள், 5 வெளி பிரசவமான குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள், தாய்மார்கள் அறை, செவிலியர்கள் பிரிவு போன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தில் பிறந்தவுடன் அழாத குழந்தைகள், மூச்சு திணறல் ஏற்படும் குழந்தைகள், நோய் தொற்று ஏற்பட்ட குழந்தைகள், மஞ்சள் காமாலை பாதித்த குழந்தைகள், எடை குறைவான குழந்தைகள். குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் ஆகிய குழந்தைகள் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    இந்த மையத்தில் வாம் மிஷின் பச்சிளம் குழந்தை களுக்கு சிகிச்சை அளிக்க 4 அமைக்கப்பட்டுள்ளது.

    ×