search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra Bandh"

    மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூக அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருவதால் 4 மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #MarathaProtest #MaharashtraBandh
    புனே:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    அப்போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

    வன்முறை தீவிரமடைந்ததால், முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் அறிவித்தனர். தங்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில், இடஒதுக்கீடு கேட்டு மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மராத்தா சமூகத்தினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக லத்தூர், ஜல்னா, சோலாப்பூர் மற்றும் புல்தானா மாவட்டங்களில் போராட்டங்கள் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசுப் பேருந்துகள், வாடகைக்கார்கள், சரக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் வகையில் புனேயின் சில பகுதிகளில்  இன்டர்செட் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மும்பையில் வழக்கம்போல் வாகனங்கள் இயங்குகின்றன.

    முழு அடைப்பை ஒட்டி மாநிலத்தில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிஐஎஸ்எப் மற்றும் எஸ்ஆர்பிஎப் படைவீரர்கள் உள்பட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation
    மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வன்முறை பரவியதையடுத்து, மராத்தா சமூக அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் திரும்ப பெறப்பட்டது. #MarathaProtest
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம் நீடித்தது.

    ஆனால், போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் இன்று வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் சில வழித்தடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கற்களை வீசி தாக்கியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.


    இவ்வாறு வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் இன்று பிற்பகல் அறிவித்தனர். மேலும் தங்கள் போராட்டம் வெற்றியடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    நாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்கவே விரும்பினோம். ஆனால் ஒருபோதும் போராட்டங்கள் வன்முறையாக மாறுவதை விரும்பமாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.

    தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும், இதற்கு அரசியல் சதிதான் காரணம் என்றும் மராத்தா கிரந்தி மோர்ச்சா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் வீரேந்தர் பவார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எந்த வன்முறையும் இன்றி 58 அமைதி பேரணிகளை நடத்தியிருப்பதாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.  #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation
    மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டாவது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #MarathaProtest #MaharashtraBandh
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

    இதற்கிடையே மராத்தா கிரந்தி மோர்ச்சா சார்பில் நேற்று முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டத்தின்போது வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக முழு அடைப்பு போராட்டம் நீடிக்கிறது. இதனால் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.



    இந்த கண்காணிப்பையும் மீறி ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது. நவி மும்பை அருகே பிர்கான்முமபை மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து கன்சோலி பகுதியில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்காத வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். அதேசமயம், குடிநீர் விநியோகம், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் சேவை, பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு விலக்கு அளித்துள்ளனர். #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation

    ×