search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai government bus"

    மதுரையில் அரசு பஸ்சில் கூட்டத்தை பயன்படுத்திய மர்ம நபர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரிடம் இருந்து 8 பவுன் நகையை திருடிச் சென்றான்.
    மதுரை:

    மதுரை 6-வது பட்டாலியனில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் கோவிந்தராஜ் (வயது 45). இவர் சம்பவத்தன்று வேலை நிமித்தமாக அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டு மதுரைக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் கோவிந்தராஜ் கைப்பையில் இருந்த 8 பவுன் நகையை நைசாக திருடிக் கொண்டு தப்பினான்.

    எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் வந்திறங்கிய கோவிந்தராஜ் பையை பார்த்தபோது நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர் கைவரிசை காட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×