என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lorry with Cows captured"
- தமிழகத்திலிருந்து தினசரி மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு இறை–ச்சிக்கு கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.
- கேரளாவுக்கு மாடுகளை கொண்டு செல்ல இருந்த லாரியை சிவசேனா கட்சியினர் சிறை பிடித்தனர்.
ஒட்டன்சத்திரம்:
தமிழகத்திலிருந்து தினசரி மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு இறை–ச்சிக்கு கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மாட்டுச்சந்தை நடைபெறும் ஒட்டன்சத்திரத்துக்கு கேரள வியாபாரிகள் வருகை தந்து அதிக அளவில் கால்நடைகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை சிறைப்பிடித்து அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் லக்கையன் கோட்டை அருகே சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் கேரளாவுக்கு மாடுகளை கொண்டு செல்ல இருந்த லாரியை சிறை பிடித்தனர். மேலும் இது குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய ஆவணங்களை சோதனை செய்ய அதிகாரிகள் முன்வருவதில்லை. இதனால் கேரளாவுக்கு அதிக அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது. துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அவர் தெரிவித்தார். எனவே இதனை தடுக்கும் விதமாக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்