search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry overturned accident"

    • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது.
    • அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

    வேடசந்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மதுரைக்கு ஒரு லாரியில் முட்டைக்கோஸ் லோடு ஏற்றிக்கொண்டு மகாலிங்கம் என்பவர் வந்தார்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் முட்டைக்கோஸ் மூட்டைகள் லாரியிலிருந்து சிதறி கீழே விழுந்தன. லாரி டிரைவர் மகாலிங்கம் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து லாரி டிரைவர் மகாலிங்கம் கூறியபோது, திடீரென லாரியின் ஸ்டேரிங் லாக் ஆனதால் பிரேக் பிடிக்க முடியவில்லை என்றும் லாரியை கட்டுப்படுத்த முடியாததால் சாலையோரம் கவிழ்ந்ததாகவும் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி முட்டைக்கோஸ் காய்கறியை சேகரித்து அவரை அனுப்பி வைத்தனர்.

    ×