search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lock breaking adventure"

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்ன பள்ளி குப்பம் ஊராட்சி காட்டு வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 50).

    இவர் வாணியம்பாடி யில் உள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மகள்கள் இருவரும் வாணியம்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கும், மகள்கள் கல்லூரிக்கும் சென்றதால் வீட்டை பூட்டிக் கொண்டு நாராயணன் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    வீடு திரும்பிய நாராயணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்தார். அதிலிருந்த 28 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    விவசாயி

    இது சம்பந்தமாக அவர் உமராபாத் போலீசில் இன்று காலை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ×