search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leena"

    பியூட்டி பார்லரில் துப்பாக்கி சூடு நடந்ததை தொடர்ந்து மீண்டும் நடிகை லீனா மரியாவிற்கு போன் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. #Leena
    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘மெட்ராஸ் கபே’ என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். சென்னையில் உள்ள வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்ததாகவும் கைதானவர்.

    கொச்சியில் லீனா மரியா பாலுக்கு சொந்தமான பியூட்டி பார்லரில் பைக்கில் வந்த 2 பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். போலீசார் விசாரணை நடத்தினார்கள். லீனா மரியாவிடமும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது சில வாரங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் ரவி புஜாராவிடம் இருந்து தனக்கு போன் வந்ததாகவும், ரூ.25 கோடி கேட்டு அவன் மிரட்டினான் என்றும் அவர் கூறியிருந்தார்.



    ரவி புஜாரா ஆட்களை அனுப்பி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் லீனா மரியாவுக்கு இன்டர்நெட் போன் அழைப்பு மூலம் மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. போனில் பேசியவன் பியூட்டி பார்லரை மூட வேண்டும் இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறியுள்ளான். இதுகுறித்தும் போலீசில் அவர் புகார் செய்துள்ளார்.
    கொச்சியில் நடிகை லீனா மரியா பால் நடத்தி வரும் பியூட்டி பார்லரில் மாபியா கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். #Leena #MalayalamActress
    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனாமரியா பால். இவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த ரெட் சில்லீஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பல மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

    மேலும் கொச்சியில் நடிகை லீனாமரியா பால் பியூட்டி பார்லரும் நடத்தி வருகிறார். இவரது பியூட்டி பார்லருக்கு நேற்று பிற்பகல் ஹெல்மெட் அணிந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பியூட்டி பார்லர் மீது சுட்டார். பிறகு அவர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

    துப்பாக்கி சூடு நடந்தபோது அந்த பியூட்டி பார்லரில் 2 பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தனர். துப்பாக்கி குண்டு சத்தம் பயங்கரமாக கேட்டதால் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. காமிராவில் துப்பாக்கியால் சுடும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது.

    அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி ஏர்கன் வகையை சேர்ந்தது என்பதும் தெரிய வந்தது. அங்கிருந்த தடயங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். ஒரு துண்டு பேப்பரில் ரவி பூஜாரி என்ற பெயரும், சில மிரட்டல் வாசகங்களும் இந்தியில் எழுதப்பட்டு கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.



    பியூட்டிபார்லரில் நடந்த துப்பாக்கி சூடு பற்றி விசாரணை நடத்த நடிகை லீனாமரியா பாலின் செல்போன் நம்பரில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் ஐதராபாத்தில் தற்போது இருப்பது தெரியவந்தது.

    அவரிடம் போனில் போலீசார் விசாரணை நடத்தியபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகையை சிலர் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அப்போது மும்பையை சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் ரவி பூஜாரி பெயரை சொல்லி தங்களுக்கு ரூ.25 கோடி தரும்படி கூறி மிரட்டி உள்ளனர். ஆனால் அதற்கு நடிகை லீனாமரியா பால் மறுத்துள்ளார்.

    மேலும் தன்னை மாபியா கும்பல் மிரட்டியது பற்றி அவர் போலீசிலும் புகார் செய்தார். எனவே அந்த மாபியா கும்பல்தான் தன்னை மிரட்டி பணம் பறிக்க துப்பாக்கி சூடு நடத்தியதாக நடிகை போலீசாரிடம் தெரிவித்தார். அவரை போலீசார் கொச்சிக்கு விசாரணைக்கு வரும்படி கூறியதால் அவரும் கொச்சி விரைந்துள்ளார்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை லீனாமரியா பால் மீது பல்வேறு பண மோசடி புகார்கள் இருப்பதும் இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

    சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு வங்கியில் லீனா மரியா பால் ரூ.18 கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

    துணி வியாபாரி ஒருவரிடம் ரூ.62 லட்சத்து 47 ஆயிரத்திற்கு ஜவுளி வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த வழக்கில் லீனாமரியா பாலும், அவரது தோழி சுக்ஷா என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி. தினகரன் தரப்புக்கு பெற்றுத் தர தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ்சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது காதலிதான் நடிகை லீனாமரியா பால் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தன் மீது ஆதாரமில்லாமல் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கும் பெண் டைரக்டர் லீனா மீது இயக்குனர் சுசி கணேசன் போலீசில் புகார் அளித்துள்ளார். #SusiGaneshan
    திருட்டு பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்திருப்பவர் இயக்குனர் சுசிகணேசன். இவர் மீது பெண் இயக்குனரான லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து டைரக்டர் சுசி கணேசன் விளக்கம் அளித்திருந்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘அருவருப்பான உங்கள் பொய் என்னை நிலை குலைய செய்து விட்டது. இந்த உலகம் போக்கிரிகளுக்கும் பொறுக்கிகளுக்கும் உகந்தது என்பதை நிரூபித்துவிட்டீர்கள். உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால் ஒரு வேளை இந்த பழியில் இருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ’’ என்று கூறி இருந்தார்.

    லீனா மணிமேகலை எனது கற்பை சூறையாடி இருக்கிறார். என் குடும்பம் வேதனையோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட்டு மூலமாக கழுவும் வரையில் எந்த பக்கமும் சாய்ந்து விடாமல் காத்திருங்கள் என்றும் சுசிகணேசன் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதில் அளித்த லீனா, சுசிகணேசனிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாகவும், எதையும் சந்திக்க தான் தயாராக இருக்கிறேன் என்றும் பதிலடி கொடுத்தார்.

    இந்த நிலையில் சுசி கணேசன், லீனா மணிமேகலை மீது போலீசில் புகார் அளித்ததுடன், கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார். கிண்டியில் வசித்து வரும் சுசிகணேசன், பரங்கிமலை உதவி கமி‌ஷனருக்கு ஆன்லைன் மூலமாக புகார் அனுப்பி உள்ளார்.

    அதில் ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சுமத்திய லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    சுசிகணேசனின் வக்கீல் சங்கமித்திரை, சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார். அதில் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை கூறிய லீனா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி லீனா மீது மானநஷ்ட வழக்கு தொடரவும் சுசிகணேசன் திட்ட மிட்டுள்ளார். நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் தர வேண்டும் என்று உத்தரவிட கோரி திங்கட்கிழமை மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.

    பாலியல் விவகாரத்தில் பல்வேறு பிரபலங்கள் சிக்கி வரும் நிலையில், யாரும் இதுவரையில் புகார் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் சுசி கணேசன், தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் முதல் ஆளாக போலீசில் புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×