என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laptop recovery"

    • பிளாட்பாரத்தில் விட்டு சென்றார்
    • போலீசார் அறிவுரை

    வேலூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவசந்திரா கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 44). காட்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று வந்த அவர் உயர் வகுப்பு பயணிகள் தங்கும் அறை அருகே ரெயிலுக்கு காத்திருந்தார். அப்போது அவரது லேப்டாப் பையை தவற விட்டு சென்று விட்டார்.

    காட்பாடி ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் கேட்பாரற்று கிடந்த லேப்டாப் பையை மீட்டனர். அதில் சோதனை செய்த போது ராஜ்குமாரின் முகவரி மற்றும் செல்போன் எண் இருந்தது.அதன் மூலம் அவரை தொடர்பு கொண்டு காட்பாடிக்கு வரவழைத்தனர்.

    காட்பாடி ெரயில்வே போலீஸ் நிலையத்தில் வைத்து ரெயில்வே போலீசார் லேப்டாப்பை ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர். மீண்டும் லேப்டாப் கிடைத்த மகிழ்ச்சியில் ராஜ்குமார் போலீசாருக்கு நன்றி கூறினார். மீண்டும் இதுபோல அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    ×