search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lady worker missing"

    • வடமதுரை அருகே மில் வேலைக்கு சென்ற பெண் மாயமானார்
    • உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா (33). அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சென்றார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் வேலைக்கு சென்ற சுதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் உறவினர்கள் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார்.

    எங்கும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×