search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lady arressted"

    • தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • செயின், கம்மல், மோதிரம் உள்பட 9 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.

    வடவள்ளி:

    வடவள்ளி அருகே உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் சிவசந்திரன் (வயது 38). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது வீட்டில் குளத்துபாளையத்தை சேர்ந்த கலைச்செல்வி (46) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 14-ந் தேதி அவர் திடீரென மாயமானார்.

    இதனையடுத்து சிவசந்திரன் வீட்டில் உள்ள பீரோவை பார்த்த போது அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 9 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.

    இதனை கலைச் செல்வி திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சிவசந்திரன் வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேராசிரியர் வீட்டில் நகைகளை திருடிய கலைச்செல்வியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×