search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuvinda people"

    • “பொங்கலோ பொங்கல்” கூறி பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது.
    • குடும்பமாக நின்று சாமி கும்பிட்டு ஒன்று கூடி சாப்பிட்டு மகிழ்வார்கள்.

    கடலூர்:

    தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா தமிழக முழுவதும் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வீடுகளிலும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வீட்டில் புது பானைகள் மற்றும் வெண்கல பானைகளில் பூசையிட்டு பொங்கலிட்டு குடும்பம் சகீதமாக புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் "பொங்கலோ பொங்கல்" கூறி பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வீடுகளில் இறைச்சி மற்றும் மீன்கள் வாங்கி சமைத்து அதனை படையலிட்டு குடும்பமாக நின்று சாமி கும்பிட்டு ஒன்று கூடி சாப்பிட்டு மகிழ்வார்கள். இதனை யொட்டி இன்று காலை முதல் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர் இதனை தொடர்ந்து இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு அணிவகுத்து நின்று வாங்கி சென்றனர்

    மேலும் பலர் மீன் வாங்கும் இடத்தில் மீன்களை ஏலம் எடுத்து ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றதையும் காண முடிந்தது இது மட்டும் இன்றி கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தை விட அதிக அளவில் கோழி ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதையும் காண முடிந்தது மேலும் நாளை காணும் பொங்கல் என்பதால் தங்களுக்கு தேவையான மீன்கள் மற்றும் இறைச்சிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றதையும் காண முடிந்தது.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகம் பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு காணப்பட்டதால் மாட்டுப் பொங்கல் விழா களைக்கட்டியது. இது மட்டுமின்றி மீன் வியாபாரிகள் இன்று பொதுமக்கள் அதிகளவில் மீன்கள் வாங்குவதால் அனைத்து வகையான மீன்களையும் வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றதையும் காண முடிந்தது.

    ×