என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kutralam Dam"

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 116.80 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 77 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி 77.75 அடியாகவும் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மழை குறைந்தது. இன்றும் காலை முதலே வெயில் அடிக்க தொடங்கியது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மலையையொட்டி அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 102 அடியை கடந்த நிலையில் இன்று காலை மேலும் 1 அடி உயர்ந்து 103.70 அடியானது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 116.80 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 71.85 அடியாக உள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தது. மழை பெய்யவில்லை.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாத நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 77 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி 77.75 அடியாகவும் உள்ளது. குண்டாறு, கருப்பாநதி அணைகள் நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் வரை பெய்த மழையால் குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் போதிய மழை இல்லாததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டியது. அதில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அதில் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    ×