என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kumbakonam govt arts college
நீங்கள் தேடியது "Kumbakonam govt arts college"
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் கல்லூரியில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பான வகுப்பறை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பான வகுப்பறை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பகத், பாலகுமாரன், தீபக், ஜெனிபர், பிரகாஷ்ராஜ் ஆகிய 5 பேரை நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை அறிந்த கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று 2-வது நாளாக மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இடைநீக்கம் செய்யப்பட்ட 5 மாணவர்களின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் கல்லூரியில் கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக வந்திருந்த பெற்றோர் கல்லூரி முதல்வர் பூங்கோதையிடம் சென்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் குறித்து முறையீட்டு வேதனை தெரிவித்தனர்.
இதனால் கல்லூரி முதல்வர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சென்று இதுபோல் நீங்கள் நடந்து கொள்வதால் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே வகுப்புகளுக்கு திரும்பி செல்லுங்கள் என்று அறிவுரை கூறினார்.
ஆனால் மாணவர்கள் அதனை ஏற்காமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பான வகுப்பறை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பகத், பாலகுமாரன், தீபக், ஜெனிபர், பிரகாஷ்ராஜ் ஆகிய 5 பேரை நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை அறிந்த கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று 2-வது நாளாக மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இடைநீக்கம் செய்யப்பட்ட 5 மாணவர்களின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் கல்லூரியில் கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக வந்திருந்த பெற்றோர் கல்லூரி முதல்வர் பூங்கோதையிடம் சென்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் குறித்து முறையீட்டு வேதனை தெரிவித்தனர்.
இதனால் கல்லூரி முதல்வர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சென்று இதுபோல் நீங்கள் நடந்து கொள்வதால் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே வகுப்புகளுக்கு திரும்பி செல்லுங்கள் என்று அறிவுரை கூறினார்.
ஆனால் மாணவர்கள் அதனை ஏற்காமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X