என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulsoom Sharif"

    பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட குல்சூமின் உடல் லாகூரில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் பண்ணை வீட்டில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. #NawazSharif #KulsumNawaz
    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
     
     நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

    தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு நவாஸ் ஷரிப் விண்ணப்பித்திருந்தார். அவரையும் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோரையும் 3 நாட்கள் பரோலில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.



    குல்சூம் நவாஸ் ஆன்மா சாந்தியடைய லண்டன் நகரின் ரிஜென்ட் பார்க் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நேற்று ‘ஜனாஸா’ தொழுகை நடைபெறுகிறது. பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட குல்சூமின் உடல் லாகூரில் உள்ள ஜத்தி உம்ரா பகுதில் அமைந்திருக்கும் நவாஸ் ஷரிப் பண்ணை வீட்டில் இன்று  மாலை அடக்கம் செய்யப்பட்டது. #NawazSharif #KulsumNawaz 
    மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் விரைவில் குணமடைய பாகிஸ்தான் மக்கள் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. #KulsoomSharif #NawazSharifwife
    லண்டன்:

    பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஷெரீப்(68). புற்றுநோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட குல்சூம் பல மாதங்களாக லண்டன் நகரில் உள்ள வீட்டில் தங்கியவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரது கணவர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் ஷெரீப் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது லண்டன் சென்று அவரை பார்த்துவிட்டு வருவதுண்டு.



    அவ்வகையில், நேற்று வாஸ் ஷெரீப், மகள் மரியம் ஷெரீப் ஆகியோர் குல்சூமை பார்ப்பதற்காக விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்று சேருவதற்குள் நேற்று பின்னிரவில் கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட குல்சூம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டுள்ள குல்சூம் சுயநினைவை இழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

    தனது தாயார் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்குமாறு நவாஸ் ஷெரீப் மகள் மரியம் ஷெரீப், மகன் ஹுசைன் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமரும் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் சார்பில் பாகிஸ்தான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    பிரார்த்தனையின் பலம் மிகவும் வல்லமையானது என்பதால் ரம்ஜான் நோன்பை நிறைவு செய்துள்ள பாகிஸ்தான் மக்கள் அனைவரும் குல்சூம் ஷெரீப் குணமடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார். #KulsoomSharif #NawazSharifwife #KulsoomSharifcardiacarrest
    ×