search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koripalayam"

    • கள்ளழகர் பக்தர்களின் நலன்கருதி கோரிப்பாளையம் பறக்கும் மேம்பால திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
    • மண்டகப்படிதாரர்கள் வலியுறுத்தினர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கள்ளழகர் கோவில் பாரம்பரிய மண்டகப்படிதாரர்கள் தலைவர் மோகன், செய லாளர் திருமால் ராஜன், பொருளாளர் கே.வி.கே.ஆர் பிரபாகரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    பிரசித்திபெற்ற மதுரை கள்ளழகர் சித்திரை திரு விழாவில் எதிர்சேவை நடைபெறக்கூடிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற உள்ளன. இதில் சித்திரை திருவிழாவை சீர்குலைக்கும் முயற்சியாகும். இதுகுறித்து அதிகாரிகளிடமும், முதல்-அமைச்சரிடமும் கூறியும் கூட ஒப்பந்த பணிகளை தொடங்க உள்ளனர்.

    கோரிப்பாளையம் பறக்கும் மேம்பால திட்டத்தை மாற்றம் செய்து தமுக்கம் பகுதியில் உள்ள கருப்பணசுவாமி கோவிலில் இருந்து கோரிப்பாளையம் வரை மாற்றி அமைக்க வேண்டும். ஏற்கனவே அவுட்போஸ்ட் பகுதி வரை மேம்பாலம் இருக்கும் நிலையில் மீண்டும் தல்லாகுளத்தில் இருந்து கோரிப்பாளையம் வரை மேம்பாலம் அமைத்தால் சித்திைர திருவிழாவிற்கு வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    மேம்பாலப்பணிகளால் கள்ளழகர் வருகை தரும் பொழுது கூட்டநெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தான நிலை உருவாகும்.

    அழகர்கோவில் சாலையில் உள்ள பாரம்பரியமிக்க மண்டகப் படிகளை மேம்பால பணிகளுக்காக இடிக்க இருப்பதாக அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர். மேலும் மண்டகப்படி தாரர்களை மிரட்டி மேம்பால பணிகளுக்காக இடத்தை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர்.

    இதுபோன்ற செயல்களை அரசு கைவிட்டு மாற்று திட்டத்தில் பணிகளை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் மேம்பா லத்திற்கான ஒப்பந்தத்தை நடத்தவிடமாட்டோம். பாலத்தை கட்டவிடாமல் தடுத்து நிறுத்தி பொது மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்.

    தல்லாகுளம் பகுதியில் மேம்பாலம் கட்டினால் தூண்கள் உருவாகும்போது கள்ளழகர் எதிர்சேவை நடைபெறவதில் சிரமம் ஏற்படும்.

    கடந்தாண்டு சித்திரை திருவிழா கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த நிலையில் இது போன்ற மேம்பால பணிகளால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×