என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Killed by power line cut"

    • மின் நிலைய ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்
    • வருவாய்த் துறையினர் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கோகுல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், விவசாய கூலி தொழிலாளி. இவர் பசு மாடு களை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார் நேற்று மாலை பாணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    அப்போது வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டின் மீது உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில் பசுமாடு மின்சாரம் தாக்கி பரிதாப மாக உயிரிழந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த பாணாவரம் துணை மின் நிலைய ஊழியர் கள் மின்சாரத்தைதுண்டித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ×