search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaythar"

    • கயத்தாறு தாலுகா சாலைப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் கணினி போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்ட கவுன்சில் பிரியா குருராஜ் தலைமை தாங்கி ஸ்மார்ட் போர்டு கல்வியை தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு தாலுகா அகிலாண்டபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த சாலைப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் போர்டு கல்வி கற்பிக்க மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கணினி போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கவுன்சில் பிரியா குருராஜ் தலைமை தாங்கி ஸ்மார்ட் போர்டு கல்வியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அணி துணை அமைப்பாளர் குருராஜ், பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் மந்திரமூர்த்தி, ஆசா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் முருகன், பள்ளிக்கல்வி மேலாண்மை குழு துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராணி வரவேற்று பேசினார்.

    இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வார்டு கவுன்சிலர் மந்திரமூர்த்தி பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியர் தங்கம்மாள் நன்றி கூறினார்.

    ×