என் மலர்
நீங்கள் தேடியது "Kavanchilars argue"
- அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
- வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி. சிசில்தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் சிட்டிபாபு பேசும்போது அதிமுக கவுன்சிலர்்கள் வார்டில் எந்த அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை பணிகள் நடைபெறவில்லை என புகார் கூறினார்.
அப்போது அ.தி.மு.க. கவுன்சிலரின் பேச்சை மறுத்த நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் நகர மன்ற துணைத் தலைவர் அதிமுகவை சேர்ந்தவர் தானே அவரிடம் கேளுங்கள் அவர் வார்டில் எவ்வளவு பணிகள் நடைபெற்று உள்ளது இந்த நகராட்சியில் உள்ள நகர மன்ற உறுப்பினர்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.
அப்போது புரட்சி பாரதம் கட்சி உறுப்பினர் மேகநாதன் அதிமுக உறுப்பினர் சிட்டிபாபு ஆகியோருக்கும் திமுக உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், சி.என். பாபு ஆகியோருக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி தலைமையில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள், பாரதிய ஜனதா கட்சி நகர் மன்ற உறுப்பினர் சீதாலட்சுமி, புரட்சி பாரதம் நகர மன்ற உறுப்பினர் மேகநாதன் ஆகியோர் சேர்ந்து நகர மன்ற தலைவரிடம் மனு அளித்து வெளிநடப்பு செய்தனர்.
அந்த மனுவில் நகர மன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாதம் ஆகிவிட்டது. இதுவரை வார்டுகளில் எந்த பணியும் சரிவர நடைபெறவில்ல, மக்களின் தேவைகளை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை குறிப்பாக கால்வாய் தூர்வார படுவதில்லை, குப்பைகள் சரிவர அகற்றாமல் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது.
வீட்டு வரி உயர்வை 40 சதவீதம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை அதிகாரிகள் கண்டு கொள்வதில் ஆகவே நகர மன்ற கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.






