search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthika festival"

    • சாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கார்த்திகை திரு விழா நடைபெற்று வருகிறது.

    கார்த்திகை இரண்டாம் வாரத்தை முன்னிட்டு யோக நரசிம்மர், அமிர்தவல்லி தாயார், யோகா ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடை பெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தக்கான்குளம் பிரம்மதீர்த்ததில் நீராடி, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • தங்க தேரில் யோகநரசிம்மர் பவனி
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை பெருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் 11 மாதங்கள் யோக நிலையில் இருக்கும் யோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பக் தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.

    கார்த்திகை பெருவிழா தொடங்கி முதல் வெள்ளியை முன்னிட்டு யோக நரசிம்மர் சுவாமி, அமிர்தவல்லி தாயார் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு தங்க தேரில் எழுந்தருளினார். மங்கள வாத்தியங்களு டன் திருக்கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×