என் மலர்
நீங்கள் தேடியது "Karmaveerar Kamarasar"
- தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெற வேண்டும்.
- வணக்கத்தினையும், மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளபதிவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்தும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தான் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று கருதுபவர்கள் சான்றோர்கள். இதற்கும் ஒருபடி மேலே சென்று, "தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெற வேண்டும்" என்ற பெருநோக்கோடு ஊர்கள் தோறும் தொடக்கப்பள்ளி, பேரூர் தோறும் நடுநிலைப் பள்ளி, நகரங்கள் தோறும் உயர்நிலைப் பள்ளி எனக் கொண்டு வந்து தமிழகத்தில் கல்விக் கண்ணைத் திறந்து வைத்த கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது வணக்கத்தினையும், மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் செய்த தியாகங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று கூறியுள்ளார்.
தான் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று கருதுபவர்கள் சான்றோர்கள். இதற்கும் ஒருபடி மேலே சென்று, "தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெற வேண்டும்" என்ற பெருநோக்கோடு ஊர்கள் தோறும் தொடக்கப்பள்ளி, பேரூர் தோறும் நடுநிலைப் பள்ளி, நகரங்கள் தோறும் உயர்நிலைப் பள்ளி எனக்… pic.twitter.com/mTt2dXUh4M
— O Panneerselvam (@OfficeOfOPS) July 15, 2024






