search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanyakumari west coast area"

    குமரி மேற்கு கடற்கரையில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால் மாவட்டத்தில் மீன்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் விசைப்படகுகள் குறிப்பிட்ட காலத்தில் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, குமரி மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 30-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    அரசின் அறிவிப்புப்படி குமரி மாவட்ட கிழக்கு கடற்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. வருகிற 15-ந்தேதி வரை இந்த தடைக்காலம் முடிவுக்கு வரும்.

    மேற்கு கடற்கரையில் இன்று முதல் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இனி ஜூலை 30-ந்தேதி வரை மேற்கு கடற்கரை மீனவர்களின் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாது.

    இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் ஒரே நேரத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இதற்கு முன்பு கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் அமலில் இருக்கும்போது, மேற்கு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். அவர்கள் பிடித்து வரும் மீன்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருவதால் குமரி மாவட்ட மக்களுக்கு மீன்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

    அடுத்து மேற்கு கடற்கரையில் தடைக்காலம் தொடங்கும்போது, கிழக்கு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்குவார்கள். இதனால் மீன்களுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருக்காது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் குமரி மாவட்டம் முழுவதும் 15 நாட்கள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் ஒட்டு மொத்தமாக யாரும் மீன்பிடிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் கட்டுமரங்கள், வள்ளங்களில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவார்கள்.

    இதில் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கும். இதனால் மாவட்டத்தில் மீன்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×