search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanthoori Ceremony"

    • செய்யது மக்தூம் பெரிய பள்ளி வாசல் கந்தூரி விழாவில் ரஜப் முதல் பிறை கொடி ஊர்வலம் நடைபெற்றது.
    • தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் உள்ள பிரசித்திபெற்ற செய்யது மக்தூம் பெரிய பள்ளி வாசல் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    கடந்த 23-ந் தேதி ரஜப் முதல் பிறை கொடி ஊர்வலம் நடைபெற்றது. அன்று இரவு 7 மணிக்கு முதல் பிறை கொடியேற்றம் நடைபெற்றது.

    நேற்று 10-வது நாள் கொடி ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடையநல்லூரில் உள்ள பேட்டை, ரஹ்மானி யாபுரம் பெரிய தெரு, புதுத்தெரு, பஜார் ரோடு, தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணாபுரம், உட்பட பல்வேறு இடங்களுக்கு யானை மீது பச்சை களை ஊர்வலமும் சந்தனக் கூடும் நடைபெற்றது . இரவு 10 மணிக்கு தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் தீன் ஒலி முழங்க கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து ராத்திப் மஜ்லீஸ் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சந்தனம் பூசுதல் நடைபெற்றது.

    இன்று( வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தீப உற்சவம் நடைபெறும். நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மவுலூது சரிப் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை பகல் தப்ரூக் என்னும் நேர்ச்சை வழங்கப்படும்.

    ×