search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jolarpettai accident"

    ஜோலார்பேட்டை அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    ஜோர்பேட்டை:

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை சேர்ந்தவர் மதியழகன்(வயது 24) ஆட்டோ டிரைவர் இவரது மனைவி ஜனனி (20) இவர்களுக்கு 1 மகன் உள்ளார்.

    இந்நிலையில் மதியழகன் நேற்று இரவு நாட்டறம்பள்ளியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது குடியாலகுப்பம் என்ற இடத்தில் வந்த போது அங்கு சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின் பக்கம் மோதினார்கள் இதில் மதியழகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×