search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joko Widodo"

    இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல்  கடந்த மாதம் 17-ம் தேதி  நடைபெற்றது. வார கணக்கில் நீடித்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்ததையடுத்து, ஜோகோ விடோடா (வயது 57) வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

    முன்னதாக, தேர்தலில் மோசடி நடவடிக்கைகள் அதிகம் இடம்பெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல் வெளியானது.

    இருப்பினும், பிரபாவோவும் அவருடைய ஆதரவாளர்களும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உடனடி அறிகுறி ஏதும் தென்படவில்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் கூறினர். எனினும், பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தோனேசியா நாட்டின் தலைநகரை ஜகர்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அந்நாட்டின் அதிபர் தீர்மானித்துள்ளார். #Indonesiacapital
    ஜகர்தா:

    சுமார் 26 கோடி மக்கள் வாழும் இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் மட்டும் சுமார் ஒரு கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அருகாமையில் உள்ள நகர்ப்புறங்களில் சுமார் 3 கோடி மக்கள் வசிப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், தற்போதுள்ள பெருநகரங்களில் மக்கள் நெருக்கடியை கட்டுப்படுத்தவும் புதிய நகரங்களை உருவாக்கி மக்களை அங்கு குடியமர்த்தவும் இந்தோனேசியா அரசு தீர்மானித்துள்ளது.


    அதிபர் ஜோக்கோ விடோடோ

    இதில் முதல்கட்டமாக இந்தோனேசியா நாட்டின் தலைநகரை ஜகர்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் பிரதான ஊடகங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன. #Indonesiacapital #Indonesiacapitalmove #Jakarta
    இந்தோனேசியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். #IndonesiaElections #JokoWidodo
    ஜகார்த்தா:

    உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இன்று மிகப்பெரிய பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. முதல் முறையாக, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். சில வாக்காளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மசூதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, ஓட்டு போட சென்றனர்.



    இந்த தேர்தலில் சுமார் 2.45 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அடுத்த 2024-ஆம் ஆண்டு வரையிலும் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை 19 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியும், இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி (போராட்டம்)  தலைவருமான ஜோகோ விடோடோவும் (வயது 57), முன்னாள் ராணுவ தளபதியும் கெரிந்த்ரா கட்சி தலைவருமான பிரபோவோ சுபியாண்டோவும் (வயது 67) போட்டியிடுகின்றனர்.

    கருத்துக்கணிப்பு முடிவுகள் விடோடோவுக்கு சாதகமாகவே உள்ளன. அதேசமயம், கடந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தவற விட்ட சுபியாண்டோ, இந்த முறை தேர்தல் களத்தில் விடோடோவுக்கு கடும் சவாலாக விளங்கினார். இந்த முறை வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சுபியாண்டோ குற்றம்சாட்டினார். ஒருவேளை தான் தோல்வி அடைந்தால், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் மே மாதம் வரை வெளியிடப்படாது என கூறப்படுகிறது. #IndonesiaElections #JokoWidodo
    இந்தோனேசியா நாட்டில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் கோழைத்தனமானது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #IndonesiaExplosion #JokoWidodo
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும், நான்கு போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

    நேற்று, இதே பகுதியில் உள்ள தேவாலயங்களில் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தொடர் தாக்குதல்களுக்கு இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “கோழைத்தனமான இந்த தாக்குதல் சம்பவங்கள், வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான  செயல்” என தெரிவித்தார்.

    மேலும், புதிய பயங்கரவாத தடுப்புச்சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிடில், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #IndonesiaExplosion #JokoWidodo
    ×