search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jharkhandencounter"

    ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Jharkhandencounter #Naxals
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சட்டார்பூர் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர், நக்சல் தடுப்பு மற்றும் போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இன்று காலை போலீஸ் படையை கண்ட நக்சலைட்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் மூன்று நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவருடையை உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு நக்சலைட்டுகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், ஏகே-47 உட்பட பல துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. #Jharkhandencounter #Naxals
    ×