search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jesus Redeems Ministries"

    • நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள், புது வாழ்வு சங்கம் சார்பில் ஆத்தூர் கீழக்குளம் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகளை தாசில்தார் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.
    • இப்பணிகள் மூலம் சுமார் 50 கி.மீ நீளத்திற்கு வாய்க்கால் தூர்வாரப்படுகிறது.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள், புது வாழ்வு சங்கம் சார்பில் ஆத்தூர் கீழக்குளம் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகளை திருச்செந்தார் தாசில்தார் சுவாமிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு விவசாய சங்கத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாதவன், லெசிஸ்டன், வெள்ளச்சாமி, ஆவுடையப்பன், சிவ சுப்பிரமணியன், சின்னத்துரை, பெருமாள், பாலமுருகன், கொடியன், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பணிகள் மூலம் சேர்ந்த மங்கலம், குமாரபன்னையூர், செல்வன் புதியனூர், புதுநகர், தலைப்பன்னையூர், ஆவரையூர் தலைவன் வடலி, கீரனூர் ஆகிய கிராமங்களில் சுமார் 50 கி.மீ நீளம் வாய்க்கால் தூர்வாரப்படுகிறது. 1500 ஏக்கர் பாசன பகுதிகள் பயன்பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் விவசாயப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் மணத்தி எண்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×