search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayabharat Home"

    • மதுரை சூர்யா நகர் அருகே ஜெய பாரத் ஹோம்சின் டைட்டன் சிட்டி தொடக்க விழா நடந்தது.
    • இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது

    மதுரை

    மதுரையை அடுத்துள்ள சூர்யா நகரில் ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யாநகரில் டைட்டன் சிட்டி என்ற பெயரில் 300 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நடந்தது.

    ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றார். ஜெயபாரத் ஹோம்ஸ் இயக்குநர் நிர்மலாதேவி ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார், சகோதரர்கள் அழகர், முருகன், செந்தில், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் பேசுகையில், கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

    மதுரை மற்றும் கோவையில் எங்களது நிறுவனம் சார்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு வீடுகளை கட்டி தர சொல்கிறார்கள். நாங்களும் தரமான வீடுகளை கட்டித்தந்து கட்டுமானத்துறையில் அனைவரும் பாராட்டும் வகையில் வீடுகளை கட்டித் தருகிறோம்.

    மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மிகுந்த தரத்துடன் கட்ட உள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.59 லட்சம் முதல் பல்வேறு தரமான வசதிகளுடன் வீடுகள் கட்ட உள்ளோம் என்றார்.

    அதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இதனை ஆயிரக்

    கணக்கானோர் கேட்டு ரசித்தனர்.

    ×