search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jackeda-Geo"

    • சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும்.
    • 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் அவுரித்திடலில் கொட்டும் மழையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சரவணன், ரவி மற்றும் முத்துசாமி ஆகியோர் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் குமார் ரமேஷ், பால சண்முகம், அரசுமணி, ஞானசேகரன், குமார், பிரசன்னா பாபு , வெற்றி வேலன்உள்ளிட்ட பல்வேறு சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவி ன்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியா க நிரப்பிட வேண்டும்.

    21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்கா லத்தை வரண்மு றைசெ ய்திட வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

    பங்கேற்றனர்.

    ×