என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "It was revealed that Rs 2 lakh cash was stolen by mysterious persons."

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • தனிப்படை போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணமாலை வேங்கிக்கால் ஊராட்சி செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 62). இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவர். அவரது மகன் சென்னையில் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் ரவிசந்திரன் சென்னைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார்.

    அப்போது அவர் வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 11 தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மர்ம நபர்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அங்கு கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு தட யங்கள் சேகரிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் போலீசார் தனிப்படை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர்.

    ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×