என் மலர்
நீங்கள் தேடியது "It is also said that they took part in the protest by capturing the vehicles"
- லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளதால் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை- அதிகாரி தகவல்
வேலூர்:
வேலுார் அடுத்த பெருமுகை யில் பாலாற்று கரையில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் மணல் குவாரி சில மாதங்க ளுக்கு முன்பு தொடங்கியது.
பெருமுகையில் யார்டும், அரும்பருதியில் குவாரியும் கொண்டு செயல்படத் தொடங்கியது. ஒரு யூனிட் மணல் ரூ.3 ஆயிரத்து 150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்லைன் மூலமாக இ சேவை மையத்தில் இருந்து மணலுக்கு பதிவு செய்ய வேண் டும். அத்துடன் கட்டுமானம் நடக்க உள்ள கட்டிடத்தின் வரைபடத்தையும், மணல் எடுக்க வரும் வாகனத்தின் எண்ணையும் அதில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு சம்பந்தப்பட்ட வர்களுக்கு எஸ் எம்எஸ் வரும். அதை காண்பித்து மணல் எடுத்துசெல்லலாம்.
மற்றபடி முறைகேடாக மணல் எடுக்க முடியாது. மேலும் பாலாற்றில் இருந்து மணலை அள்ளி எடுக்க பொக்லைன் போன்ற எந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது, யார்டில் இருந்து மட்டும் வாகனங்களுக்கு எந்திரங்கள் மூலமாக மணல் நிரப்பப்படும் என்று கூறியிருந்தனர்.
ஆனால், பெருமுகை பகுதியில் மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதாக அப்ப குதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் ஏராளமான லாரிகள் மணல் எடுத்துக்கொண்டு செல்வதாகவும், பாலாற்றில் இருந்தே பொக்லைன் மூலமாக விதிமீறி வாகனங்களில் மணல் நிரப்புவ தாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.
பாலாற்றுக்கரையோரம் உள்ள சுடுகாட்டையும்கூட விட்டு வைக்காமல் மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் மணல் எடுத்து வந்த வாகனங்களை சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே பாலாற்றில் இருந்து அளவுக்கு மீறிய மணல் கடத்தல் காரணமாக நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேலுார் மாவட்ட விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி யிருந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:-
'ஆற்றுப்படுகை யில் எந்திரங்கள் கொண்டு மணல் அள்ளப்படுவது இல்லை. யார்டில் மட்டுமே எந்திரங்கள் வாகனங்களில் மணல் ஏற்ற பயன்படுத்தப் படுகிறது.
ஆற்றில் நீரோட்டம் இருப் பதால் குவாரி பணிகள் பாதிக் கப்படக்கூடாது என்பதற்காக நீர் வழித்தடத்தை திருப்பிவிட எந்திரங்கள் பயன்படுத்தியி ருப்பார்கள். இதுகுறித்து எந்த புகாரும் வரவில்லை, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறோம். முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை' என்றார்.
பெருமுகை மணல் குவாரிக்கு வரும் லாரிகள் அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை நிறுத்தி வருவதால் பெரும் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மணல் குவாரிக்கு வரும் லாரிகளை நெடுஞ்சாலையில் நிறுத்த அனுமதிக்க கூடாது என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






