என் மலர்
நீங்கள் தேடியது "isai parai"
ஓசூர் அருகே மிலிதிக்கி என்ற மலைக் கிராமத்தில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மணி ஓசை எழுப்பும் இசைப்பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை:
ஓசூர் அருகே மிலிதிக்கி என்ற மலைக் கிராமத்தில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மணி ஓசை எழுப்பும் இசைப்பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இசைப்பாறையில் சிக்கம்மா தொட்டம்மா ஆகிய தெய்வங்கள் பல்லாங்குழி விளையாடினர். எனவே இது தெய்வப்பாறை எனவும் கிராம மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். முற்றிலும் மற்ற பாறைகளிலிருந்து மாறுபட்ட கோணத்தில் சிறு சிறு பல்லாங்குழிகள் வடிவத்துடன் இந்த பாறை அமைந்துள்ளது.
இந்த பாறையில் கல்லால் அடித்தால் மணி ஓசை எழும், இந்த இசைப்பாறை சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கிராமமக்களும், வரலாற்று ஆர்வலர்களும் கூறுகின்றனர். இந்த பாறை 4 அடி அகலமும், 3 அடி உயரமும் உடையதாக ஒரு பெரிய பாறைகற்கள் மீது வைக்கப்பட்டுள்ளது. சிக்கம்மா, தொட்டம்மா தெய்வங்கள் இந்த இசைப்பாறையில் அமர்ந்து பல்லாங்குழி விளையாடியதாக கூறப்படுகிறது.
மேலும் மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு வரும் ஆடு, மாடுகளை வனவிலங்குகளிடமிருந்து காக்க இசைப் பாறையை தட்டி இசை எழுப்பி வருகிறார்கள்.
மணி ஓசையை கொடுக்கும் பாறை மிலிதிக்கி வனப்பகுதிக்குள் உள்ளது என்ற செய்தி சுற்றுப்புற கிராமங்களில் பரவியதை தொடர்ந்து தினந்தோறும் 100-க்கணக்கான கிராமமக்கள் பல்வேறு கிராமங்களிலிருந்து இதனை காண இங்கு வந்து செல்கின்றனர்.
ஓசூர் அருகே மிலிதிக்கி என்ற மலைக் கிராமத்தில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மணி ஓசை எழுப்பும் இசைப்பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இசைப்பாறையில் சிக்கம்மா தொட்டம்மா ஆகிய தெய்வங்கள் பல்லாங்குழி விளையாடினர். எனவே இது தெய்வப்பாறை எனவும் கிராம மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். முற்றிலும் மற்ற பாறைகளிலிருந்து மாறுபட்ட கோணத்தில் சிறு சிறு பல்லாங்குழிகள் வடிவத்துடன் இந்த பாறை அமைந்துள்ளது.
இந்த பாறையில் கல்லால் அடித்தால் மணி ஓசை எழும், இந்த இசைப்பாறை சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கிராமமக்களும், வரலாற்று ஆர்வலர்களும் கூறுகின்றனர். இந்த பாறை 4 அடி அகலமும், 3 அடி உயரமும் உடையதாக ஒரு பெரிய பாறைகற்கள் மீது வைக்கப்பட்டுள்ளது. சிக்கம்மா, தொட்டம்மா தெய்வங்கள் இந்த இசைப்பாறையில் அமர்ந்து பல்லாங்குழி விளையாடியதாக கூறப்படுகிறது.
மேலும் மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு வரும் ஆடு, மாடுகளை வனவிலங்குகளிடமிருந்து காக்க இசைப் பாறையை தட்டி இசை எழுப்பி வருகிறார்கள்.
மணி ஓசையை கொடுக்கும் பாறை மிலிதிக்கி வனப்பகுதிக்குள் உள்ளது என்ற செய்தி சுற்றுப்புற கிராமங்களில் பரவியதை தொடர்ந்து தினந்தோறும் 100-க்கணக்கான கிராமமக்கள் பல்வேறு கிராமங்களிலிருந்து இதனை காண இங்கு வந்து செல்கின்றனர்.






