என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Investors suddenly argued among themselves"

    • தனியார் நிதி நிறுவன அலுவலகம், பொருளாதார குற்றபிரிவு போலீசாரல் மூடி சீல்வைக்கப்பட்டது
    • 30-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமத்தை விஜயகுமார்(37). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜென்டாக பணிபுரிந்து வந்தார். இவர் நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களிடம் பணத்தை வசூல் செய்து நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு அந்த நிதிநிறுவனம், முதலீட்டாளர்களுக்கு ஒழுங்கான முறையில் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்த தனியார் நிதி நிறுவன அலுவலகம், பொருளாதார குற்றபிரிவு போலீசாரல் மூடி சீல்வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று தனியார் நிதி நிறுவன ஏஜென்டு விஜயகுமார் வீட்டின் முன்பு முதலீட்டாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி வீட்டை முற்றுகையிட்டனர்.

    அப்போது முதலீட்டாளர்கள் திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் செய்துக்கொண்டனர். மேலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், சயனபுரத்தை சேர்ந்த பாண்டியன்(32) என்பவர் காயம் அடடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×